ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி கிளப் நிர்வாகி தேர்வு

கள்ளகுறிச்சியில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவில், புதிய தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பாபு ஆகியோர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள், ரோட்டரி மாவட்ட தேர்வு ஆளுநர்கள் சிவசுந்தரம், செந்தில்குமார், முன்னாள் ஆளுநர் வெங்கடேசன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

ரோட்டரி தேர்வு துணை ஆளுநர் ராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் வாழ்த்திப் பேசினா். புதிய நிர்வாகிகள் சார்பில் ரோட்டரி பவுண்டேஷனுக்கு போலியோ சொட்டு மருந்து நிவாரண நிதி 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் இமானுவேல் சசிக்குமார், மூர்த்தி, பெருமாள், சுரேஷ்பாபு, ஞானராஜ், முத்துசாமி, எத்திராஜ் மற்றும் இயக்குனர்கள் அன்பழகன், சேகர், கந்தசாமி, இளங்கோவன், விஜயசேகர், கோவிந்தன், பாண்டியன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story