திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் ரூ.16.5 கோடி நிதி

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் ரூ.16.5 கோடி நிதி
காசோலை வழங்கிய ரோட்டரி நிர்வாகிகள் 
திருப்பூர் மருத்துவ கல்லூரியில் அமைய உள்ள புற்றுநோய்க்கான பிரத்யேகமாக சிகிச்சை மையம், பரிசோதனைக்கூடம், ஆய்வகம் தொடங்க ரோட்டரி பப்ளிக் வெல்ஃபேர் ட்ரஸ்டின் சார்பில் ஏற்கனவே லீனியர் ஆக்சிலேட்டர் வாங்க மற்றும் பங்கர் கட்டுவதற்காக ரூபாய் 11.5 கோடிக்கான காசோலையை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ,மாநகராட்சி பவன்குமார் ஜி கிரியப்பனவரிடம் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக ரோட்டரி பப்ளிக் வெல்ஃபேர் ட்ரஸ்டின் தலைவர் முருகநாதன் தலைமையில் ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள். உடன் பொருளாளர் அருள்செல்வம், தாமோதரன், ஆனந்த் ராம், சக்திவேல், ராம்குமார், பாலாஜி மற்றும் டாக்டர் சுரேஷ் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story