வாலிபரிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது !

வாலிபரிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது !

கைது 

சேலம் அருகே வாலிபரிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவர் வாடகை ஆட்டோவில் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். கார்த்திக் நேற்று புது ஏரிக்கரை விநாயகர் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பெரியபுதூர் பகுதியை சேர்ந்த ரவுடியான முருகன் (31) என்பவர் வந்தார்.

பின்னர் அவர் கத்தியை காட்டி கார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டினார். இதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Tags

Next Story