தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

 தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம்,முளகுமூடு பகுதியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சுஜின் ராஜ் (38) கொத்தனார். இவர் நேற்று முன்தினம் கல்லுவிளை சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் அஜின் (24) என்பவர் வந்தார். திடீரென சுஜின்ராஜை வழிமறித்து செல்ல விடாமல் தடுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 650 ஐ பறித்து விட்டு சென்றுள்ளார்.

இது தொடர்பாக சுஜின் ராஜ் அளித்த புகரி பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜினை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜின் ஏற்கனவே ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து அஜின் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

Tags

Next Story