திருச்சியில் ரூ.1.13 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவா் கைது

திருச்சியில் ரூ.1.13 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவா் கைது

பைல் படம்

கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் வெவ்வேறு பயணிகள் இருவரிடம் இருந்து, ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை விமானத்தில் வந்த ஆண் பயணி தனது உடலுக்குள் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை மூலம் 1025 கிராம் தங்கத்தை எடுத்தனா். அதன் மதிப்பு ரூ. 64.51 லட்சமாகும். இதேபோல திங்கள்கிழமை இரவு துபையிலிருந்து விமானத்தில் வந்த பெண் பயணி கடத்தி வந்த 772 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 48.60 லட்சமாகும். ஆக மொத்தம் ரூ.1.13 கோடியிலான 1797 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story