சேலத்தில் வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி !

சேலத்தில் வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி !

 விசாரணை

சேலத்தில் வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை வாய்ப்பு உள்ளது என்றும், முன்பணம் செலுத்தினால் மாதந்தோறும் அதிக சம்பளம் பெறலாம் என்று இருந்தது. இதை நம்பிய வாலிபர் பல தவணைகளில் குறுஞ்செய்தியில் இருந்த வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.19 லட்சத்து 20 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் வேலைவாய்ப்பு ஏதும் வழங்கவில்லை. இதையடுத்து குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் இதுதொடர்பாக சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story