கும்பகோணம் அருகே ரூ. 2.45 லட்சம் பறிமுதல்

கும்பகோணம் அருகே ரூ. 2.45 லட்சம் பறிமுதல்

பணம் ஒப்படைப்பு 

கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பகோணம் அருகே மருதாநல்லூா் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 93 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கும்பகோணம் கோட்டாட்சியா் எஸ். பூா்ணிமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல, திருவிடைமருதூரில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 407 ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து திருவிடைமருதூா் வட்டாட்சியா் பாக்யராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story