டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூபாய் 2.67 லட்சம் கொள்ளை

டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூபாய் 2.67 லட்சம் கொள்ளை

காளையாா்கோவில் அருகே மிளகாய் பொடி தூவி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூபாய் 2.67 லட்சம் கொள்ளை நடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காளையாா்கோவில் அருகே மிளகாய் பொடி தூவி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூபாய் 2.67 லட்சம் கொள்ளை நடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மதுக்கடை ஊழியா்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ.2.67 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மறவமங்கலத்தில் உள்ள மதுக்கடையில் முருகானந்தம், தினகரன் ஆகிய இருவரும் ஊழியா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், கடையில் முதல் நாள் விற்பனையான ரூ.2.67 லட்சத்தை காளையாா்கோவிலில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக கடையில் இருந்து நண்பகலில் இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்பட்டனா்.

அப்போது, இவா்களைப் பின்தொடா்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு போ், திடீரென இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதினா். இதில் கீழே விழுந்த அவா்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி அவா்களிடமிருந்த பணத்தைப் பறித்து சென்றனா். இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story