பெரம்பலூர் அருகே வாகன சோதனையில் ரூ.3.30 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர் அருகே வாகன சோதனையில் ரூ.3.30 லட்சம் பறிமுதல்

வாகன சோதனை

பெரம்பலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி மரவநத்தம் பிரிவு பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது டூவீலரில் உரிய ஆவணங்கள் இன்றி பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இதனால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story