ரூ. 4.38 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகள் தொடக்கம்

நத்தம் தொகுதியில் பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பீட்டிலானபுதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நத்தம் பேருந்து நிலையத்தில் நினைவு வளைவு, நத்தம் காந்தியார் கலையரங்கத்தில் புதிய மேடை மற்றும் நத்தம் அவுட்டர் பகுதியில் பயணியர் நிழற்குடை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகள் என ஆக மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ள வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலர்கள் தர்மராஜ்,மோகன், ரத்னாகுமார்,பழனிசாமி,நத்தம் நகர செயலர் ராஜ்மோகன், வாட்டாடட்சியர் சுகந்தி,பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story