சேலத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.5 லட்சம் வழிப்பறி

சேலத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.5 லட்சம் வழிப்பறி

கோப்புப் படம்

சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (39), இவர் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார்டைல்ஸ் கடையில் வேலைப்பார்த்து வருகிறார்.

இவர் தினமும் விற்பனையாகும் பணத்தை பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்வார். இதே போல் சம்பவத்தன்றும் இவர் கடையில் வியாபாரம் மூலம் கிடைத்த ரூ. 5 லட்சத்து130-ஐ செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். அவர் திருவாகவுண்டனூர் பைபாஸ் மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர்.

பின்னர் திடீரென அவர்கள் செல்வராஜ் மீது மிளகாய் பொடி தூவி அவர் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து130-ஐ பறித்து சென்றனர். இதையடுத்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags

Next Story