போலி கணக்கு உருவாக்கி ரூ.6 கோடி மோசடி - இருவர் கைது

போலி கணக்கு உருவாக்கி ரூ.6 கோடி மோசடி - இருவர் கைது

கைது 

அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் போலி கணக்கு உருவாக்கி ரூ.6 கோடி மோசடி செய்த மேலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக சாந்தி நகரை சேர்ந்த அப்துல் கபூர், அம்பையை சேர்ந்த மகாராஜா சுப்ரமணியம் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் போலி கணக்கு உருவாக்கி 6 கோடி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி போலீசார் விசாரணை நடத்தி இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story