அதிக கமிஷன் தருவதாக எஞ்சினியரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி

அதிக கமிஷன் தருவதாக எஞ்சினியரிடம் ரூ.8.5 லட்சம் மோசடி

சைபர் கிரைம் 

சேலம் மாவட்டம் சின்ன சீரகாப்பாடியை சேர்ந்த 30 வயது என்ஜினீயர் ஒருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்த தகவல் வந்தது. அவர் வாட்ஸ்-அப் வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருகிறோம் என்றார். மர்ம நபர் தெரிவித்தபடி பல தவணைகளாக ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்து 965 முதலீடு செய்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.5,800 மட்டும் கமிஷன் தொகை கிடைத்தது. பின்னர் அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த என்ஜினீயர் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story