ஒசூர் அருகே ரூ.8,75,000 மின்கட்டணம்: விவசாயி அதிா்ச்சி

ஒசூர் அருகே ரூ.8,75,000 மின்கட்டணம்: விவசாயி அதிா்ச்சி

கோப்பு படம் 

ஓசூர் அருகே ரூ.8,75,000 மின்கட்டணம் செலுத்தக் கோரி வந்த குறுஞ்செய்தியை கண்டு விவசாயி அதிா்ச்சி அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவா் விவசாயி வெங்கடேஷ். இவரது வீட்டில் ஐந்து உறுப்பினா்கள் உள்ளனா்.

அதில் பெரும்பாலானவா்கள் பகலில் விவசாய வேலை நிமித்தமாக வெளியே சென்று விடுவதால் அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தனா். இதனால் மின்கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லாமல் இருந்து வந்தனா்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது கைப்பேசிக்கு மின்சார வாரியத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டிய மின் கட்டணமாக ரூ. 8, 75,000 செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த வெங்கடேஷ் தனது மின் கட்டணத்தை முறையாகச் சரிசெய்து தருமாறு கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

Tags

Next Story