திமுக வேட்பாளரை ஆதரித்து ஆர்.எஸ்.பாரதி வாக்கு சேகரிப்பு!

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆர்.எஸ்.பாரதி வாக்கு சேகரிப்பு!

திமுக

ஆரணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து ஆர்.எஸ்.பாரதி வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மண்டி தெருவில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இக்கூட்டத்தில் அனக்காவூர் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், நகரமன்ற துணைத்தலைவர் பேபிராணி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story