ஆர்.எஸ் மங்கலம் அருகே வாலிபரை தாக்கி பணம் பறிப்பு

ஆர்.எஸ் மங்கலம் அருகே வாலிபரை தாக்கி பணம் பறிப்பு
வாலிபனை அடித்து பணம் பறிப்பு

மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ராஜ்புட் தேகாரி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஆன ஹுசைன் மஹால்தார்(33) என்பவர் தனது பகுதியைச் சேர்ந்த13 பேருடன் ஆனந்தூரில் தங்கி சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று கட்டிட வேலை பார்த்து வருவது வழக்கம்.இவர் நேற்று முன்தினம் காளையார் கோவில் பகுதியில் கட்டிட வேலை பார்த்ததற்கு அங்குள்ள இன்ஜினியரிடம் ரூ.25,000 வாங்கிக் கொண்டு தனது டூவீலரில் நேமம் வழியாக ஆணையார்கோட்டை கண்மாய்கரை பகுதியில் வரும்போது,

டூவீலரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அன்று மாலை 4 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்கள் நடமாற்றம் இல்லாத வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ஹுசைன் மஹால்தாரை இடைமறித்து வழி கேட்பது போல் நடித்து மர்ம நபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் ஹுசைன் மஹால்தாரை பின்புறம் தாக்கி உள்ளனர் மற்றவர் இவரின் கழுத்தைப் பிடித்து நெறித்துள்ளார்.]

மூன்றாவது நபர் இவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ரூபாய்.25 ஆயிரம் பறித்துக் கொண்டு மூன்று பேரும் தப்பி ஓடி உள்ளனர்.மயக்கம் தெளிந்து ஆனந்தூரில் தங்கி உள்ள சக நண்பர்களிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார். உடலில் ஊமை காயம் பட்ட ஹுசைன் மஹால்தாருக்கு ஆனந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்டம் ஹலோ போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story