ரூ.10 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டிடம்

ரூ.10 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டிடம்

அடிக்கல் நாட்டு விழா

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story