பேராவூரணியில் ஆர்எஸ்எஸ் பேரணி

பேராவூரணியில் ஆர்எஸ்எஸ் பேரணி
ஆர்எஸ்எஸ் பேரணி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ராஷ்டிரிய ஸவயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்)சார்பில் அணிவகுப்பு, பேரணி, பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீலகண்டன் தலைமை வகித்தார். பன்னீர் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார் விபாக் கலந்து கொண்டார்.

பார்த்தசாரதி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பேரணி வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி, சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, முதன்மை சாலை வழியாக நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் சென்று, வேதாந்தம் திடலில் நிறைவடைந்தது. பேரணியில், 200க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வேதாந்தம் திடலில் ஆர்.எஸ்.எஸ் கொடியேற்றப்பட்டு, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, தஞ்சாவூர் சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், டிஎஸ்பிக்கள் பட்டுக்கோட்டை பிரிதிவிராஜ் சவுகான், ஒரத்தநாடு பிரசன்னா, காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் என 200 க்கும் மேற்பட்டோரும், மேலும், வஜ்ரா வாகனம், அதி விரைவுப் படை, கலவரத் தடுப்பு வாகனம், வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Next Story