ஆர்டிஎம் கல்லூரியில் 3ஆம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

ஆர்டிஎம் கல்லூரியில் 3ஆம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

பைல் படம்

சிவகங்கை ஆர்டிஎம் கல்லூரியில் ஜூலை 8 ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஏற்கனவே 2 கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 8 அன்று ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், ஜூலை 9 அன்று புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும், ஜூலை 10 அன்று அனைவருக்கும் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 9.00 மணிக்கு முன்பு கல்லூரிக்கு வர வேண்டும்.

காலதாமதமாக வருவோர் தரவரிசையிலான சேர்க்கை வாய்ப்பை இழக்க நேரிடும். விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் 3 நகல்களுடன், 5 போட்டோக்களும் கொண்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story