இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்டிஓ விசாரணை !

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்டிஓ விசாரணை !

தற்கொலை

அருமனை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை. ஆர்டிஓ விசாரணை நடத்துகின்றனர்.

அருமனை அருகே மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன் மகன் ஷானு. இவருக்கும் பளுகல் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகள் தீபா என்பவருகும் கடந்த 2019 ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஷானு சவுதி அரேபியாவில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் இவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன மீண்டும் சவுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார். தீபா தனது குழந்தையுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.வீட்டின் கீழ் தளத்தில் ஷானு வின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

மேல் தளத்தில் தீபா தனது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இரவு தீபா திடீரென உடலில் மண்ணெண்ணெய் விட்டு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. உறவினர்கள் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உடலில் தீ பற்றி கருகிய நிலையில் தீபா உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என கூறப்படுகிறது.

தகவலின் பேரில் அருமனைபோலீசார் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக ஷானுவின் பெற்றோர் மற்றும் அருகில் உள்ள உறவுகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். உயிரிழப்புக்கான காரணம் குறித்து முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பத்மநாப ஆர்டிஓ விசாரணை துவக்கி உள்ளார்.

Tags

Next Story