திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்வு

தேர்வு எழுதும் மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தேர்வில் 2,452 மாணவா்கள் கலந்து கொண்டனா்.ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவா்களுக்கு 12-ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகையாக ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நிகழ் கல்வி ஆண்டுக்கான (2023-24) ஊரகத் திறனாய்வுத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. தேர்வுக்காக 11 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தோவில், 2,452 மாணவா்கள் பங்கேற்றனா். 44 மாணவா்கள், 61 மாணவிகள் என மொத்தம் 105 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Tags

Next Story