ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம் 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயற்குழு கூட்டம் வட்டாரத் துணைத் தலைவர் ஜோஸ் பென்சீகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக கிளைக்கு புதிய நிர்வாகிகளாக மூத்த உறுப்பினரும் வட்டார வளர்ச்சி அலுவலகமான சுந்தர மகாலிங்கம் வட்டார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வட்டாரச் செயலாளராக சென்றாய பெருமாள், வட்டாரப் பொருளாளராக தமிழ் ராஜாங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினராக கலைச்செல்வம், வட்டாரத் துணைத் தலைவராக இளையராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் வருகின்ற 15 மற்றும் 16ஆம் தேதி விருத்தாச்சலத்தில் நடைபெற உள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவைக்கு மாவட்ட ஆட்சியரக கிளையின் மாநிலப் பேரவையின் பிரதிநிதியாக மாவட்ட இணைச் செயலாளர் சார்பாக ராம்நாத்பாபு கலந்து கொள்வதற்கு செயற்குழு ஒரு மனதாக தேர்ந்தெடுத்தது. மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் தனபாலன் நன்றியுரை கூறினார்.

Tags

Next Story