தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த காஞ்சிபுரம் மேயர்

தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த காஞ்சிபுரம் மேயர்

ஐ சி யு சேவை

இந்திரா நகர் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ மாமல்லன் தனியார் மருத்துவமனை. இங்கு முப்பது படுகையில் கொண்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கொண்டு சிறுநீரகம், கண் , மகப்பேறு , எலும்பியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது
காஞ்சிபுரம் பொன்னேரி கரை அடுத்த இந்திரா நகர் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ மாமல்லன் தனியார் மருத்துவமனை. இங்கு முப்பது படுகையில் கொண்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கொண்டு சிறுநீரகம், கண் , மகப்பேறு , எலும்பியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி கிராமப்புற ஐ சி யூ சேவை வழங்குனரான சிபாக்கா நிறுவனம் இந்தியா முழுவதும் அதனை விரிவாக்கி பல்வேறு கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த சிபாக்கா நிறுவனம் 10 மாநிலங்களின் ஐ சி ய செயல்பாடுகளை திறன்பட தனது மருத்துவ வல்லுநர்கள் கொண்டு செயல்படுத்தி வரும் நிலையில் காஞ்சிபுரம் மாமல்லன் மருத்துவமனையுடன் இணைந்து இத் திட்டத்தை இன்று முதல் செயல்படுத்துகிறது. இந்த மருத்துவ சேவை பிரிவினை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , சிபாக்கா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜா அமர்நாத் மாமன் அண்ணன் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அசுவதி சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் , சிபாக்கா நிறுவன அலுவலர்கள் , மருத்துவமனை ஊழியர்கள் , மருந்து விற்பனை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story