நத்தம் அருகே 12ஆம் ஆண்டாக சபரிமலை பாதயாத்திரை

நத்தம் அருகே 12ஆம் ஆண்டாக சபரிமலை பாதயாத்திரை
தீக்குளியில் இறங்கிய பக்தர்கள்
நத்தம் அருகே 12ஆம் ஆண்டாக சபரிமலை பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் 12-ஆம் ஆண்டாக சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அய்யனார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இருமுடி கட்டி அன்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story