தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - 4 பேர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - 4 பேர் கைது

பைல் படம் 

வளசரவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1.42 லட்சம் பணம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், திருமலை நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து ராமாபுரம் போலீசார் தீவிரமாக கண்காணித்தபோது லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ராமாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்(45), பாக்கியராஜ்(31), பாலாஜி(43), சுரேஷ்(37), ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story