வெற்றிலை மூட்டை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

வெற்றிலை மூட்டை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

வெற்றிலை விற்பனை 

கடத்தூர் வாரச்சந்தையில் ஒரு மூட்டை வெற்றிலை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மொத்தம் ரூ. 3.50.லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை நடைபெற்றது

தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு நத்தமேடு பெத்தானூர் -கோம்பை, அஸ்திகிரியூர் .முத்தானூர் அய்யம்பட்டி. கேத்திரெட்டிப்பட்டி. உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட 128 (கவுளி) கட்டுகளைக் கொண்ட வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் சராசரியாக ஆரம்ப விலை பத்தாயிரம் முதல் அதிகபட்சமாக 15.000 ரூபாய் வரையில் விற்பனையானது கடந்த வாரத்தில்10 000 - 12.000 விற்றது, கடந்த வாரத்தை காட்டிலும் 3000 ரூபாய் விலை அதிகரித்து வெற்றிலை பெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் நேற்று நடந்த சந்தையில் 3.50 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story