சீன பட்டாசுகள் விற்பனை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சீன பட்டாசுகள் விற்பனை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சிறப்பு பட்டாசு விற்பனை துவக்கம் 

சீன பட்டாசுகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில் கடந்த ஆண்டு ரூ 85 லட்சத்திற்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும்,இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் தரமாகவும், குறைந்த விலையிலும் இருப்பதால் பொதுமக்கள் அதனை வாங்கி பயன்படுத்துமாறும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் அவ்வாறு புகார் வந்தால் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நீதிமன்றம் தெரிவித்துள்ள பட்டாசு வெடிக்கும் நேரத்தை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story