காரிமங்கலத்தில் ரூ.18 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம் வாரச் சந்தையில் வரத்து அதிகரித்ததால் தேங்காய் விலை சரிந்து விற்பனையானது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை தேங்காய் சந்தை நடப்பது வழக்கம். நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

நேற்று நேற்று சுமார் 1 லட்சத்து 75,000 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவை பொறுத்து 8 முதல் 12 வரை பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனை நடந்தது. நேற்று நடந்த சந்தையில், சுமார் 18 லட்சம் அளவிற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. வரும் நாட்களில், திருமண முகூர்த்த நாட்கள் வரும் நிலையில் தேங்காய் விற்பனை அதிகரித்து இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து அதிகரித்து, விலை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story