காரிமங்கலத்தில் ரூ.9 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம் தேங்காய் வாரச் சந்தையில் ரூ.9 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க் கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்ட ணம், பாரூர், அரசம்பட்டி, தட்ரஅள்ளி,குடிமேனஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 75 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவை பொறுத்து 8 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை விற்பனையானது. சுமார் 9 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடந்தது. தேங்காய் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story