மானாமதுரையில் காலாவதியான பொருட்கள் விற்பனை - தட்டிகேட்ட செய்தியாளரிடம் வாக்குவாதம்

மானாமதுரையில் காலாவதியான பொருட்கள் விற்பனை - தட்டிகேட்ட செய்தியாளரிடம் வாக்குவாதம்

வாக்கு வாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர்

மானாமதுரையில் காலாவதியான பொருட்கள் விற்பனையை தட்டிகேட்ட செய்தியாளரிடம் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருளை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய நிலையில் அது காலாவதியாகி இருந்தது இது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்ட வாடிக்கையாளரிடம் நான் என்ன செய்ய முடியும் பிடித்தால் வாங்கி செல்லவும் இல்லை என்றால் நீங்கள் என்னிடம் கேட்பது போல் நான் தயாரிப்பவரிடம் கேட்க முடியுமா என்று வாக்குவாதம் செய்த நிலையில் இதை பார்த்த செய்தியாளர் அங்கு சென்று நடந்தவை குறித்து விசாரித்து காலாவதியான பொருட்களை படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளரிடம் கடைக்காரர் வாக்குவாதம் செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் விசாரணை செய்து கடையில் காட்சி படுத்தபட்டிருந்த குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு அடுக்கி வைக்கபட்டிருந்த உணவு பொருட்கள் அனைத்தும் கலாவதியாகி விற்பனை செய்து வந்தது தெரியவந்ததை தொடர்ந்து அனைத்து உணவு பொருட்களையும் பறிமுதல் செய்ததோடு கடையின் உரிமையாளரை எச்சரித்து சென்றனர்.

Tags

Next Story