கஞ்சா விற்பனை - 6 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம்

கஞ்சா விற்பனை -  6 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம்
காவல் நிலையம் 
அடையாளஞ்சேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து 2.200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த அடையாளஞ்சேரி பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக அணைக்கட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அடையாளஞ்சேரி ஏரிக்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 1. 200 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. மேலும் அந்த 4 பேர், கூவத்தூர் சித்தார்த்தன் (27), அடையாளஞ்சேரி காந்த் (29), குணா (24), சரத்குமார் (27) என்பதும் தெரிந்தது.

இதேபோல அடையாளஞ்சேரி பொங்கமேடு பகுதியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அது அன்பரசு (25), வாலோடை சக்திவேல் (24) மற்றும் கூவத்தூர் கதிர், தென்பட்டனம் குமார் என்பது தெரிந்தது. இதில் கதிர் மற்றும் குமார் தப்பியோடி விட்டனர். மற்ற 6 பேரையும் கைது செய்த அணைக்கட்டு போலீசார், செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். போலீசார் தப்பியோடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story