தபால் நிலையங்களில் தங்கபத்திரம் விற்பனை

தபால் நிலையங்களில் தங்கபத்திரம் விற்பனை

தங்பத்திரம்

நாமக்கல் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தங்கபத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.

தபால் நிலையங்களில் தங்கபத்திரம் விற்பனை நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப் பத்திரம் விற்பனை வரும் 12- ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஹ.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

ஒருவர் ஒரு கிராம் முதல் 4000 கிராம் வரை வாங்கலாம்.தங்க பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்க பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டிற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 2.5% ஆண்டு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் . இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும் .

இந்த திட்டம் வருகிற பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுகிறது . இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 6263/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 20 நாட்களுக்கு பிறகு தங்க பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை தொடர்புகொள்ளவும், அவ்வாறு அலுவலகம் செல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட அலைபேசியில் அழைத்தால் உங்கள் வீடு தேடி எங்கள் சேவை அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். விவரங்களுக்கு வணிக வளர்ச்சி அலுவலர்களான நவீன் பிரபு (9488434443), சங்கர் (9042855559) ஐ தொடர்பு கொள்ளவும் இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதார் எண்.

பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு மிக மிக அவசியம். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தங்கப் பத்திர திட்டத்தில் 100 கிராம் ரூ. 2,68,400/- முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு எட்டு ஆண்டுகள் முடிந்து ரூ 6,13,200 முதிர்வுத் தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது . கூடுதலாக அவர்களுக்கு ரூ.53,680/- வட்டியாக வழங்கப்பட்டது. தங்கத்தை பத்திர வடிவில் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கத்தை சேமிக்கலாம்.

எனவே,பொதுமக்கள் அனைவரும் அதிக லாபம் தரக்கூடிய இந்த தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tags

Next Story