குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மதுவிற்பனை: இருவர் கைது

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மதுவிற்பனை: இருவர் கைது

கோப்பு படம் 

குமாரபாளையத்தில் உள்ள சில ஓட்டல் கடைகளில் அதிக விலைக்கு மது பான பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்து போலீசார் இருவரை கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள சில ஓட்டல் கடைகளில் அதிக விலைக்கு மது பான பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

பவர் ஹவுஸ் எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் அதிக விலைக்கு விற்க, வைத்திருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஓட்டல் மேலாளர் சீனிவாசன், 33, பணியாளர் கோரா சந்த் மாக்கூர், 33, இருவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து இது போல் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story