மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை: வணிகர்கள் கோரிக்கை

மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை: வணிகர்கள் கோரிக்கை

மனு அளித்த வணிகர்கள்

மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது என்று வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

புதுக்கோட்டையில் மளிகைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மனுக்கள் பெட்டியில் போட்டனர்.

சங்கத்தின் மாவட்டப் புரவலர் ராஜேந்திரன், தலைவர் கருப்பையா, செயலர் ராமநாதன், பொருளாளர்ரமேஷ், துணைத் தலைவர் முகமது சாதிக் பாட்சா உள்ளிட்டோரும் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனர்.

மருந்து வணிக உரிமம் பெறாத மளிகைக் கடைகள் மற்றும் இதர கடைகளிலும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கக் கூடாது. இந்த உத்தரவை மக்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story