தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை

திண்டுக்கல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினருடன் இணைந்து பழனிச் சாலை, மதுரை சாலை, பிரதான சாலையிலுள்ள மளிகைக் கடைகள், தேநீா் கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது 9 கடைகளிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 35 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். அந்த கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, உரிமையாளா்களுக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story