தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை

அவிநாசியில் பெட்டி கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவிநாசி அருகே தேவம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தேவம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திவாகர் மகன் குமார் (வயது 21) ராவ்பக்கர்சிங் மகன் முகேஷ் குமார் (34) என்பது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த கைப்பையில் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதே போல அவினாசி அருகே பழங்கரை பகுதியில் இருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பெட்டிக்கடை நடத்த வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story