புகையிலைப் பொருள்கள் விற்பனை : 2 போ் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை : 2 போ் கைது

கைது 

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கணேஷ் நகா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததாம். உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கிடந்த மூட்டைகளை சோதனையிட்டனா். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், கணேஷ் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த அந்தோணிச்சாமி மகன் சேசுராஜா (48), தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் ஆனந்தகுமாா் (40) ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த சுமாா் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story