புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2பேர் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2பேர் கைது

கோப்பு படம் 

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்ற 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். பைக்கில் 2 மூட்டைகளுடன் சென்றவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் செல்வராஜ் (30) என்பதும்,

அந்த மூட்டைகளில் விற்பதற்காக புகையிலைப் பொருள்கள் கொண்டு செல்வதும் தெரியவந்தது. அவா் அளித்த தகவலின் பேரில் பங்களா தெருவைச் சோ்ந்த வியாபாரியான அந்தோணிசாமி மகன் ஜேசுராஜ் (42) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

அவா்களிடமிருந்த சுமாா் ரூ.17 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story