சேலம் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிர்வாகி போன் திருட்டு.....

சேலம் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிர்வாகி போன் திருட்டு.....

புகார்

சேலம் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிர்வாகி செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 45). இவர் சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. அவைத்தலைவராக உள்ளார். கோட்டை பகுதியில் நேற்று இரவு நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் செல்வக்குமார் மேடையின் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது, செல்வக்குமார் பையில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story