அரசு கலைக் கல்லூரியில் கலை விழா

அரசு கலைக் கல்லூரியில் கலை விழா

அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா

அரசு கலைக் கல்லூரி விழாவில் சர்வதேச கபடி வீரர் பங்கேற்பு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தார். வருமான வரித்துறை ஆய்வாளரும் சர்வதேச கபடி வீரருமான முருகானந்தம் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். விளையாட்டுத்துறை செயலாளர் ஜெயசூர்யா நன்றி கூறினார்.

விழாவில் பெரியார் பல்கலைக்கழக அணியில் இடம் பெற்று அனைத்து இந்திய அளவில் நடந்த கோகோ, கால்பந்து , ஆணழகன் மற்றும் வலுதூக்கும் போட்டியில் பல்கலைக்கழக அணி சார்பில் பங்கேற்ற 20 பேருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் 30பேருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

கல்லூரி விளையாட்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட், கபடி, வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், ஹாக்கி, இறகுபந்து, கேரம், செஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன

Tags

Next Story