சேலம் மத்திய சிறையில்10-ம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் 100%தேர்ச்சி

சேலம் மத்திய சிறையில்10-ம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் 100%தேர்ச்சி

வெற்றிபெற்ற கைதிகளுக்கு பாராட்டு

சேலம் மத்திய சிறையில்10-ம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் 100%தேர்ச்சி அடைந்தனர்.

சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகள் 23 பேர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 23 கைதிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இவர்களை சிறை சூப்பிரண்டு வினோத் பாராட்டி பேனா பரிசு வழங்கினார்.

அதேபோல் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மனஇயல் நிபுணர் வைஷ்ணவி, நல அலுவலர் அன்பழகன், சிறை துணை அலுவலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story