சேலம் மாநகர் பா.ம.க. செயற்குழு கூட்டம்: அருள் எம்எல்ஏ பங்கேற்பு

சேலம் மாநகர் பா.ம.க. செயற்குழு கூட்டம்: அருள் எம்எல்ஏ பங்கேற்பு

பாமக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

சேலம் மாநகரில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் அஸ்தம்பட்டி அருண் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

மாவட்ட வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கார்த்தி, மாவட்டத்தலைவர் கதிர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜமாணிக்கம், சுமன், சங்கர், சின்னசாமி, நடராஜன், திரிசங்கு, ராசா அண்ணாமலை,

சோடா சண்முகம், சிவகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் தங்கம், சித்ரா கிருஷ்ணா பால், சித்ரா கதிரவன், மாவட்ட இளைஞரணி விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story