கீரிப்பட்டியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

கீரிப்பட்டியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கீரிப்பட்டி ஊராட்சியில் ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் உணவு தயார் செய்யும் பணிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் நடைபெற்று வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் இரண்டாம் நாளான இன்று கீரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பதில் தூய்மையாகவும் சிறந்த முறையில் தயார் செய்ய அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை, வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story