தம்மம்பட்டி, உலிபுரம் ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியர் ஆய்வு

தம்மம்பட்டி, உலிபுரம் ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியர் ஆய்வு
கோட்டாச்சியர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் இடங்களில் ஆத்தூர் கோட்டாச்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி, உலிபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, ஆத்தூர் கோட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். தம்மம்பட்டியில் வரும் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நகர திமுக பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி சனிக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 29-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து, அங்கும் சென்று அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் எஸ்.எம்.சண்முகம், காதாரத் துறை, கால்நடை துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story