சேலம் மாநகராட்சி 9வது வார்டு சபா கூட்டம்

சேலம் மாநகராட்சி 9வது வார்டு சபா கூட்டம்

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

சேலம் மாநகராட்சி 9-வது வார்டு சபா கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி 9-வது வார்டில், பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கவுன்சிலர் தெய்வலிங்கம் தலைமை தாங்கினார். வார்டு தி.மு.க. செயலாளர் லோகு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வார்டுக்குட்பட்ட மகாகவிபாரதியார் தெருவில் சாக்கடை கால்வாயுடன் கூடிய தார்சாலை, பெயர் இல்லாத தெருக்களுக்கு, தெரு பெயர் வைக்க வேண்டும். பாழடைந்த 3 கிணறுகளை மூடித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்தனர். அப்போது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து கங்காபுதூரில் கான்கிரீட் சாலை அமைத்து கொடுத்ததற்காக அந்த பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி தொழில் நுட்ப உதவி அலுவலர் ஸ்ரீதர், வரி வசூலிப்பர் பிரபாகரன் உள்பட வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story