சேலம் மாநகராட்சி ஊழியர் தற்கொலை

சேலம் மாநகராட்சி ஊழியர் தற்கொலை

பைல் படம்

சேலம் மாநகராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

சேலம் மரவனேரி கோர்ட் ரோடு காலனி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (23). இவர் மாநகராட்சியில் தூய்மை பணி சூப்பர் வைசராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்ல குளித்து விட்டு தனது அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவை திறந்து பார்த்தனர். அப்போது அறையில் ரவிச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story