திருப்பூர் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட மேலாளர் ஆய்வு!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார்சின்ஹா ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட மேலாளர் ஆய்வு! சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார்சின்ஹா திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. டிக்கெட் மையம், இருசக்கர வாகன நிறுத்தம், நடைமேடை விரிவாக்கம் மற்றும் ரெயில் நிலைய நுழைவு வாசல் புதுப்பிப்பு ஆகிய பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து வஞ்சி ப்பாளையம் ரெயில் நிலையத்தில் கூட்ஷெட் விரிவாக்க பணிகளை அவர் ஆய்வு செய்தார். திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story