சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஐம்பெரும் விழா

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஐம்பெரும் விழா

 ஐம்பெரும் விழா 

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஐம்பெரும் விழா நாளை முதல் நடக்கிறது.
சேலம் அரசு மகளிர் கல்லூரியில் நாளை முதல் 28-ம் தேதி வரை விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, பட்டமளிப்பு விழா, கல்லூரி ஆண்டு விழா,நுண்கலை மன்றம் மற்றும் பேரவை நிறைவு விழா ஆகியவை நடக்கிறது. நாளை காலை 8 மணிக்கு விளையாட்டு விழா துவங்குகிறது. உடற் கல்வி இயக்குனர் சிவகுமார் வரவேற்கிறார். கல்லூரி முதல்வர் ரங்கநாயகி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக போலீஸ் எஸ்.பி அருண்கபிலன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினர் தேவராஜன் பரிசளிக்கிறார். விளையாட்டு துறை செயலாளர் ஹெப்சி ஜோஸ்பின் நன்றி கூறுகிறார். 26-ம் தேதி காலை 10 மணிக்கு முத்தமிழ் விழா நடக்கிறது. முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு சிறப்புரையாற்றுகிறார். 27-ம் தேதி காலை 10 மணிக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது. குழந்தை வேல் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 28-ம் தேதி கல்லூரி ஆண்டு விழா நடக்கிறது. முதல்வர் ரங்கநாயகி தலைமை வகிக்கிறார். பேரவை துணைத்தலைவர் மரகதம் வரவேற்கிறார். பிற்பகல் 2 மணிக்கு நுண்கலை மன்றம் மற்றும் பேரவை நிறைவு விழா நடக்கிறது. நுண்கலை மன்ற செயலாளர் சர்மிளா நன்றி கூறுகிறார்.

Tags

Next Story