சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

உண்டியல் எண்ணும் பணி 

சேலம் ராஜகணபதி கோவில் உண்டியலில் ரூ.3.94 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
சேலம் ராஜகணபதி கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு எண்ணினர். இது குறித்து கோவில் உதவி ஆணையர் ராஜாவிடம் கேட்ட போது, ராஜகணபதி கோவில் தேரோட்டம் விரைவில் நடைபெற உள்ளது. தேரோட்ட பாதையில் உள்ள ஒரு உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் மொத்தம் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 748 இருந்தது. அதே போன்று 8 கிராம் தங்கம், 22 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர் என்றார்.

Tags

Next Story