சேலம் : நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகள் சீரமைப்பு

சேலம் : நகராட்சி அரசு  நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகள் சீரமைப்பு

சீரமைக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா

சேலம் அருகே இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட காடையாம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் கட்டிடம் மற்றும் வகுப்பறைகள் தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் மாணவர்கள் நலக்குழு சார்பில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராஜு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்று பேசினார். புதுப்பிக்கப்பட்ட புதிய வகுப்பறையை தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து மத்திய அரசின் தேர்வாணைய குழு உறுப்பினர் அமலோற்பவநாதன் பேசினார். விழாவில் இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் தளபதி , நகர செயலாளர் செல்வம், வட்டார கல்வி அலுவலர்கள் முருகன், பிரேம் ஆனந்த், மேற்பார்வையாளர் சீனிவாசன், மாணவர் நலக்குழு செயலாளர் மாதேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன் , பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசி, நகராட்சி கவுன்சிலர்கள் விஜயா முருகன், நதியா ராஜேந்திரன் உள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story